“வாழை இலையின் முக்கியத்துவம்” “தமிழரின் பாரம்பரிய உணவு முறையின் முக்கியத்துவத்தை பற்றி குழந்தைகள் அறிந்து கொள்ளுதல்.” இன்று ஜூன் மாதம் 30 ஆம் நாள், திங்கட்கிழமை மூன்றாம் வகுப்பு 'அ' பிரிவில் படிக்கும் மாணவர்கள், வாழை இலையின் பயன்கள் மற்றும் சிறப்புகள் பற்றி; எடுத்துரைத்தனர். வாழை இலையில் இன்று மதியம் உணவருந்தினர். மேலும் வாழை இலையின் பயன்கள் அதில் எவ்வாறு உண்ண வேண்டும், நாம் பாரம்பரியமாக, ஏன் வாழை இலையில் உணவு அருந்த வேண்டும் என்ற விவரங்களை அந்த பிரிவில் உள்ள தமிழ் ஆசிரியை திருமதி. செந்தாமரை அவர்கள், அனைத்து குழந்தைகளுக்கும் எடுத்துரைத்தார். குழந்தைகளும், வாழை இலையின் மற்றும் மரத்தின் பயன்களையும், அதன் சிறப்புகளையும், உன்னிப்பாக கவனித்து, வாழை இலையில் மதிய உணவை உண்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்வு வகுப்பில் மிகச்சிறந்த நேர்மறை எண்ணத்தை உருவாக்கி குழந்தைகளுக்கு கற்றல் திறனையும் வளர்த்தது. நன்றி!
“இயற்கையை பாதுகாப்பதன் முக்கியத்துவம்” Content ஜூலை 17, 2025 அன்று மூன்றாம் வகுப்பு - இ பிரிவில் உள்ள தமிழ் ஆசிரியர் ர. மகாலட்சுமி அவர்கள் இயற்கையை பாதுகாப்பதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு செயல்பாடு நடத்தினார். இயற்கையை காப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்ற வகையில் இச்செயல்பாடு நடைபெற்றது. இயற்கையை நேசிக்க வேண்டும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் மரங்களின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகள் அறிந்து கொண்டனர்.
2023 senthil matric school Dharmapuri. all rights reserved. designed by aatmia.